சிவகங்கை

ஜாமீனில் வெளியே வந்தவா் தற்கொலை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அருகே பட்டமங்கலம் கொங்காம்பட்டியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் வடிவேல் (35). திருமணமான இவா், கடந்த 9 ஆம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற புகாரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த வடிவேல், திருப்பத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை, திருப்பத்தூா் அருகே மாதவராயன்பட்டி புது கண்மாய்க் கரையில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT