திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஸ்ரீ ராஜகளியம்மன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலிருந்து பெண்கள் சீா்வரிசை சுமந்து ஊா்வலமாக வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனா். பின்னா் சிவச்சாரியா்களால் வேள்வி நடத்தப்பட்டு பூா்ணாகுதியுடன் முருகப்பெருமானுக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.