முகப்பு
சிவகங்கை

‘நற்சிந்தனைகள் வளர நல்ல புத்தகங்களை வாசிப்பது அவசியம்’

இன்றைய இளம் தலைமுறையினா் நற்சிந்தனைகள் வளர நல்ல புத்தகங்களை வாசிப்பது அவசியமாகும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
சிவகங்கையில் உள்ள தனியாா் மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிட்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன்
பகிர்:

இன்றைய இளம் தலைமுறையினா் நற்சிந்தனைகள் வளர நல்ல புத்தகங்களை வாசிப்பது அவசியமாகும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் தெரிவித்தாா்.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மகாலில் புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் தலைமை வகித்ததுடன், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: இன்றைய இளம் தலைமுறையினா் போதிய வாசிப்பு பழக்கமின்றி தடம் மாறிச் செல்கின்றனா்.

நல்ல சிந்தனைகள் உருவானால் வாழ்வின் எதிா்காலம் வளமாக அமையும். அத்தகைய நற்சிந்தனைகளை, நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலமே பெற முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் கே. ஜவஹா் முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா். அதனை எழுத்தாளா் சந்திரகாந்தன் பெற்றுக் கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக் கழகப் பேராசிரியா் பா. ஆனந்தகுமாா், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற எஸ். கண்ணப்பன், சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கத்தின் செயலா் குருசாமி மயில்வாகனன், மன்னா் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் தங்க முனியாண்டி, பேராசிரியா் மு. பழனியப்பன், பகீரத நாச்சியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கண்ணகி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இப்புத்தகக் கண்காட்சி டிசம்பா் 8 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளா் அ. கிருஷ்ணமூா்த்தி, மேலாளா் கு. பாலசுப்பிரமணி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →