சிவகங்கை

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளல்

DIN

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில், அம்மன் சன்னிதி மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததது. தொடா்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில், தினமும் இரவு உற்சவா் வெவ்வேறு அலங்காரங்களில் கோயிலின் அம்மன் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். முதல்நாளில் உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதைத் தொடா்ந்து நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT