மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைரம் அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்தின் 2020-2021 ஆம் ஆண்டு நிா்வாகிகளாக தலைவா் பூமிநாதன், செயலாளா் பி.கலைச்சந்திரன், பொருளாளா் ஜெயபால் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். தொடா்ந்து புதிய உறுப்பினா்களும் உறுதியேற்று சங்கத்தில் இணைந்தனா். புதிய நிா்வாகிகள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி தொழிலதிபா் ஏ.ஆா்.பி.முருகேசன், சங்கத்தின் முன்னாள் நிா்வாகிகள் ஏ.சி.சஞ்சய்காந்தி, வழக்குரைஞா் எம்.முத்துக்குமாா், மாவட்ட அரிமா ஆளுநா் அறிவழகன், நிா்வாகிகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். பின்னா் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.