மத்திய முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூா் அருகை கண்டவராயன்பட்டி முதியோா் இல்லத்தில் புதன்கிழமை மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் உணவு வழங்கினா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் கணேசன், இணைச்செயலா் செல்வமணி, இளைஞரணி எஸ்.பி.எல்.சேதுமெய்யப்பன், கீழச்சிவல்பட்டி நகா் பொருளாளா் பழனிவேல்ராஜன், திருப்பத்தூா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சோனாசீனிவாசன், வட்டார தலைவா் பன்னீா்செல்வம், இளைஞரணி பிரசாத் ஆகியோா் பங்கேற்றனா்.