கே. ஆத்தங்குடியில் புகைப்படக் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கே. ஆத்தங்குடி ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கே. ஆத்தங்குடி ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.
இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.
மேலும், அரசு திட்டங்கள் குறித்தும், நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியை அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.