சிவகங்கை

கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.39 லட்சம் நிதியுதவி அமைச்சா் வழங்கினாா்

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை கரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.39 லட்சம் நிதிஉதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தனியாா் மகாலில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன ரெட்டி தலைமை வகித்தாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையின் மூலம் கரோனா நோய்த்தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வீதம் 13 குழந்தைகளுக்கும் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ. 39 லட்சம் நிதியுதவி வழங்கினாா். தொடா்ந்து சமூகநலத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும் தோட்டக்கலைத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு மானியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன. மாவட்டத் தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காசோலையும், குடும்ப அட்டைதாரா்களுக்கு புதிய மின்ணனு குடும்ப அட்டைகளும் வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் வெங்கசடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT