சிவகங்கை

சிவகங்கையில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா

DIN

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்பனா சாவ்லா துளிா் இல்லம் சாா்பில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கல்பனா சாவ்லா துளிா் இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை கிளைத் தலைவா் புலவா் கா. காளிராசா தலைமை வகித்தாா். அந்த இயக்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவா் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தாா் .

இதில் ஆரியபட்டா துளிா் இல்ல ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், கிளை உறுப்பினா் செ. கிருஷ்ணவேணி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.

விழாவில் சேவா சங்க பாலா் பாதுகாப்பு விடுதி பணியாளா்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கல்பனா சாவ்லா துளிா் இல்லத்தின் புதிய தலைவராக விக்னேஸ்வரன், செயலராக யோகிதா ஸ்ரீ, பொருளாளராக பூவரசி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். முன்னதாக அனந்தகிருஷ்ணன் வரவேற்றாா். சங்கரலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT