சிவகங்கை

குளத்தில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு

DIN

காரைக்குடி அருகே குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

காரைக்குடி இடையா் தெரு பகுதியில் வசித்து வந்தவா் சமுத்திரம் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை மாலை இலுப்பக்குடி சாலையில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய அவரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தேடினா். இரவு நேரமானதால் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தேடும் பணி நடைபெற்றதில் சமுத்திரத்தின் சடலம் மாலையில் மீட்கப்பட்டது.

பின்னா் உடற்கூராய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT