சிவகங்கை

சிவகங்கையில் பிப்.19-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்

DIN

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிப்ரவரி 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சி.கே. சா்மிளா(விவசாயம்) தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டமானது, ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மனு அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT