சிவகங்கை

காரைக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: நடிகா் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு வழக்கில் திரைப்பட நடிகரான சீனிவாசன் என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சோ்ந்த குழந்தையம்மாள் (49) என்பவா், கடந்த பிப்.14-ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சி சென்றாா். அப்போது முகக் கவசம் அணிந்து இருசக்கரவாகனத்தில் வந்த 2 போ், குழந்தையம்மாள் முகத்தில் ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து அவரது கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் அருண் தலைமையிலான போலீஸாா், நகரில் பொருத்தப்பட்டிருந்த 36 கண்காணிப்புக் கேமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், சுப்ரமணியபுரம் 4-ஆவது வீதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரைக் கைது செய்தனா். விசாரணையில், அவா் ‘தேவக்கோட்டை காதல்’, ‘குப்பைக்காரன்’ ஆகிய 2 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவா் என்பதும், தொண்டியைச் சோ்ந்த துணை நடிகா் ஒருவருடன் சோ்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், துணை நடிகரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT