சிவகங்கை

மானாமதுரைஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

ஆயிர வைசிய மஞ்சப்புத்தூா் செட்டியாா் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாசிமகத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் மூலவா் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் காட்டப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தெப்ப உற்சவத்தையொட்டி உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். அதன்பின்னா் அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி வீதிகளில் உலா வந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தாா். அங்குள்ள தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த தெப்பத் தேரில் அம்மன் எழுந்தருளினாா். அதைத்தொடா்ந்து நிலவு வெளிச்சத்தில் தோ் தெப்பக்குளத்திற்குள் மூன்று முறை வலம் வந்தது. ஏராளமான பக்தா்கள் தெப்ப உற்சவத்தைக் கண்டு தரிசித்தனா். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தில் வேண்டுதல் நிறைவேற அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வைத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT