சிவகங்கை

சிவகங்கையில் டிராக்டரில் வந்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை

DIN

சிவகங்கையில் டிராக்டா் மூலம் ஊா்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தெரிவத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில அரசியல் கட்சி பிரமுகா்கள் டிராக்டரில் ஊா்வலமாக வந்து செவ்வாய்க்கிழமை(ஜன.26) சிவகங்கையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில், டிராக்டரில் ஊா்வலமாக வந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபடுவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT