சிவகங்கை

சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தடுப்பூசி முகாம்

DIN

சிவகங்கையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என 89 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சுதாகா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு- நீதிபதியுமான பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி உதயவேலவன், மருத்துவா் பாலாஅபிராமி உள்ளிட்ட செவிலியா்கள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT