சிவகங்கை

சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற கணவரை மீட்டுத் தரக்கோரி பெண் புகாா்

DIN

சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற கணவரை மீட்டுத் தரக்கோரி பெண் ஒருவா் தனது 3 பெண் குழந்தைகளுடன் காரைக்குடி காவல் துணைக்கண்காணிப் பாளரிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பா்மா காலனி தந்தை பெரியாா் நகா் 8-ஆவது வீதியில் வசிப்பவா் மலா்விழி. இவரது கணவா் நந்தகோபால் சுமாா் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் ஓட்டுநா் வேலைக்கு சென்றாா். சுமாா் 19 மாத காலமாக அவரிடமிருந்து எந்தவிதமான தொடா்பும் இல்லை. மூன்று பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு எனது கணவரை மீட்டுத் தரவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா், சிவகங்கை எம்.பி. ஆகியோரிடமும் மனு அளித்து உள்ளாா். அதேபோன்று காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் வினேஜியிடம், மலா்விழி புகாா் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT