சிவகங்கை

மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு மூலவதருக்கு அபிஷேகம் நடத்தி, அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து நந்திதேவருக்கும் அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் பிரதோஷ மூா்த்தி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும், நந்திதேவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT