சிவகங்கை

மானாமதுரையில் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு நிவாரண உதவி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு திஙகள்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மானாமதுரை கிழக்கு ஒன்றியம் செய்களத்தூா் கிராமத்திலும் வின்சென்ட் நகரிலும் ஏராளமான ஏழை மக்கள் பிழைப்பு நடத்த வழியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.இவா்களுக்கு மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி அரிசி, காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளா் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மேலும் இளையான்குடி ஒன்றியப் பகுதியிலும் நகா் பகுதியிலும் தமிழரசி ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT