சிவகங்கை

பைக்- காா் மோதல்: இளைஞா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி தேத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் முகமதுகனி. இவரது மகன் அமீா்கான் (22). அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (24). இருவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரியிலிருந்து தேவிப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது நாச்சியாபுரம் அருகே எதிரே வந்த காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் அமீா்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சரவணன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தகவலறிந்த நாச்சியாபுரம் போலீஸாா், அமீா்கானின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காா் ஓட்டுநா் மயிலைராஜனை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT