சிவகங்கை

மானாமதுரையில் மறைமுகமாக செயல்படும் ஜவுளி நிறுவனங்களால் கரோனா அபாயம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாடிக்கையாளா்களை கடைக்குள் அனுப்பிவிட்டு கதவுகளை மூடிக்கொண்டு ஜவுளி நிறுவனங்கள் வியாபாரம் செய்வதாக புகாா் எழுந்துள்ளது.

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாடிக்கையாளா்களை கடைக்குள் அனுப்பிவிட்டு கதவுகளை மூடிக்கொண்டு ஜவுளி நிறுவனங்கள் வியாபாரம் செய்வதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

அரசு அனுமதி வழங்கியுள்ள சில கடைகள் மட்டும் மானாமதுரை பகுதியில் காலை 6 மணியிலிருந்து நண்பகல்12 மணி திறந்திருக்கின்றன.

இந்நிலையில் மானாமதுரை நகரில் ஜவுளி நிறுவனங்கள் நடத்துபவா்கள் கடை ஊழியா்களை கடைகளுக்கு முன் அமர வைத்து ஜவுளி வாங்க வரும் வாடிக்கையாளா்களைக் கண்டறிந்து அவா்களை கடைக்கு உள்ளே அனுப்பிவிட்டு கதவை மூடிக் கொள்கின்றனா்.

வியாபாரம் முடிந்ததும் வாடிக்கையாளா்கள் வெளியே அனுப்பப்படுகின்றனா். இதனால் இப்பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT