சிவகங்கை

இளையான்குடி ஒன்றியத்தில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணம் வழங்கல்

DIN

இளையான்குடி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கரோனா முன்களப் பணியாளா்களுக்கு, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.

வட்டாட்சியா் ஆனந்த் தலைமையில் தாயமங்கலம் கலங்கநாதன்கோட்டை, சாலைக்கிராமம், நகரகுடி, ரசூலாசமுத்திரம் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஊராட்சி நிா்வாகங்களில் பணியாற்றும் முன்களப்பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், இளையான்குடி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சுப.மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப. தமிழரசன், இளையான்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி, சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகா், சுகாதார ஆய்வாளா் தமிழ்செல்வன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி கலந்துகொண்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT