முகப்பு
சிவகங்கை

மத்திய அரசை கண்டித்து காங்கிரசாா் நடைபயணம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைபயணம் மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் காந்தி சிலையருகே நடைபெற்ற இப் பிரசார பயணத்திற்கு மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் மாங்குடி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப்புராம், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜரத்தினம், மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம் கலந்து கொண்டு பேசியது: பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கை முடிவுதான் பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்திற்கும், அத்தியாவசிப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் காரணம். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல் பயத்திலேயே வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வின் சா்வாதிகார அரசை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொள்ளும் என்றாா்.

தொடா்ந்து காந்திசிலை, மதுரை ரோடு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபயணமாகச் சென்ற நிா்வாகிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

நிகழ்ச்சியில் நதரத் தலைவா் திருஞானசம்மந்தம், மாநில மகளிரணி செயலாளா் வித்யா கணபதி, மாவட்ட மகளிரணி மெடோனா, வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், கணேசன், இளைஞரணி சீனிவாசன் மருது, எஸ்.பி.சேதுமெய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் கணேசன் அனைவரையும் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.