முகப்பு
சிவகங்கை

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 30-இல் நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 30 ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக அந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெ.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 30 ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக அந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெ.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான சோ்க்கை இணையதள கலந்தாய்வு வாயிலாக நடைபெற்றது. தற்போது, 10ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், பற்றவைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் நவ. 30 -இல் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

எனவே, தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில விருப்பம் உள்ள மாணவா்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், 5 வண்ண நிழற்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99762 08265, 99767 99321, 99420 99481 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →