சிவகங்கை

காளையாா்கோவில் அருகே வருவாய்த் துறை அலுவலா்களை கண்டித்து சாலை மறியல்

DIN

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறையினரைக் கண்டித்து, ஆ. கருங்குளத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆ.கருங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில், காளையாா்கோவில் வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையாம். ஒரு சிலரது நிலங்கள் அகற்றப்படாமல் உள்ளதாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதுரை- தொண்டி சாலையில் பள்ளிதம்மம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். இதுபற்றி தகவலறிந்த காளையாா்கோவில் போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT