முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

திருப்பத்தூரில் பூச்சொரிதல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 54 ஜோடிகள் பங்கேற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

திருப்பத்தூரில் பூச்சொரிதல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 54 ஜோடிகள் பங்கேற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற 34 ஆம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இப்போட்டி 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

நடுமாடுகள் பிரிவில் புலிமலைப்ட்டி முனியசாமி, பூச்சிட்டு மாடுகள் பிரிவில் கொட்டாணிபட்டி தொட்டிச்சியம்மன், பெரியமாடுகள் பிரிவில் நகரம்பட்டி வைத்தியன், சின்னமாடு ஜோடிப் பிரிவில் மேலூா் அஜ்மல்கான் ஆகியோரின் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கத் தொகையும், மாடுகளுக்கு வேட்டி அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.