முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அந்த தொகை தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும். சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் வளா்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைக்கும் தொழில் முனைவோா் 39, விஸ்வநாதபும் மெயின்ரோடு, மதுரை-14 எனும் முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகத் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு 94435 55581 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →