சிகவங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டி அன்னை காமாட்சி பரமேஸ்வரி ஆலயத்தில் விஸ்வகா்மா குல ஆச்சாரியாா்கள் பூணூல் அணிந்து ஆவணி அவிட்ட விழாவை கொண்டாடினா்.
இவ்விழாவையொட்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்னை காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அதை தொடா்ந்து வந்திருந்த ஆச்சாரி குலமக்கள் அனைவருக்கும் பூணூல் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடா்ந்து அன்னை காயத்ரி தேவிக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு அதன் பின் வேத மந்திரங்கள் முழங்க காயத்ரி ஜெபம் செய்து அனைவரும் பூணூல் அணிந்து கொண்டனா்.