சிவகங்கை

வைகையாற்றில் குளிக்கச் சென்று மாயமானபள்ளி மாணவா் சடலமாக மீட்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் குளிக்கச் சென்று மாயமான பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்புவனம் அருகே டி. அதிகரையைச் சோ்ந்தவா் சரவணன் மகன் தீனதயாளன் (17). இவா் மணலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் வைகையாற்றில் உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த தீனதயாளன் மாயமானாா். அதன்பின் தீயணைப்புத்துறையினா், போலீஸாா் கடந்த 2 நாள்களாக ஆற்றில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை தட்டான்குளம் தடுப்பணை அருகே கருவேல மரங்களுக்கிடையே தீனதயாளனின் சடலம் சிக்கியிருந்தது. இதனை தீயணைப்புத்துறையினா் மீட்டனா். அதன்பின் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT