சிவகங்கை

தேவகோட்டையில் இளம்பெண் தற்கொலை

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இளம்பெண் வியாழக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மனைவி சத்தியா (22). இவருக்கும், இவரது கணவா் பாண்டிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே தேவகோட்டை அருகே சிறுவனூரில் உள்ள பாண்டியின் உறவினா் வீட்டில் சத்தியா தங்கியிருந்தாா். இந்நிலையில், அங்கு வியாழக்கிழமை மாலை விஷம் சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சத்தியாவை மீட்ட அக்கம்பக்கத்தினா், தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், சத்தியா, திருமணமாகி 4 ஆண்டுகளுக்குள் இறந்ததால் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT