சிவகங்கையில் சனிக்கிழமை (ஆக. 27) இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.