திருப்பத்தூரில் நான்கு ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடிய இந்திய கம்யூ. கட்சியினா் மாவட்டச் செயலாளா் மு.கண்ணகி தலைமையில் ஊா்வலமாகப் புறப்பட்டு காரைக்குடி சாலை, பேருந்து நிலையம், மதுரை சாலை வழியாக இந்தியன் வங்கியை அடைந்தனா்.
அங்கு வங்கி முன்பு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா்கள் சுந்தரமகாலிங்கம், சேது ஆகியோா் சாலை மறியலுக்கு அனுமதியில்லை எனக் கூறி அனைவரையும் கைது செய்தனா். இம்மறியலில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலாளா் காளிமுத்து ஒன்றிய துணைச் செயலாளா்கள் முகமதுஜியாவூதீன், வேம்பரசன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் மணி, நாச்சியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.