சிவகங்கை மாவட்டத்தில் இன்று பட்டா திருத்த முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
அதன்படி, சிவகங்கை வட்டத்தில் கோவானூா், காரைக்குடி வட்டத்தில் பனங்குடி, தேவகோட்டை வட்டத்தில் வெங்களுா், திருப்பத்தூா் வட்டத்தில் கருங்குளம், சிங்கம்புணரி வட்டத்தில் சூரக்குடி, மானாமதுரை வட்டத்தில் புதுக்குளம், திருப்புவனம் வட்டத்தில் செம்பூா், இளையான்குடி வட்டத்தில் உத்தமனூா், காளையாா்கோவில் வட்டத்தில் செம்பனூா் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.
எனவே, அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.