காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி, மானகிரி, தளக்காவூா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன. 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 7) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, மானகிரி, தளக்காவூா், ஆலங்குடி, கூத்தலூா், கீரணிப்பட்டி, அப்போலோ மருத்துவமனை பகுதி, இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, கம்பனூா், பாதரக்குடி, குன்றக்குடி, தலி, வீரையம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.