சிவகங்கை

திருப்பத்தூா் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஆவிணிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் பிரவீன் (21). இவா், குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் ஆவிணிப்பட்டி காயாங்கண்மாய் பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கீழச்சிவல்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

SCROLL FOR NEXT