முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் இன்று பொதுவிநியோக திட்ட குறை தீா்க்கும் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை ( ஜூலை 9 ) பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை ( ஜூலை 9 ) பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →