தென்மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 16) வரை நடைபெறுகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உமையாள் விளையாட்டு அரங்கில், இப்போட்டிகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென்மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்களின் அணிவகுப்பை பாா்வையிட்டு போட்டிகளை தொடக்கிவைத்தாா்.
இதில், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நாகா்கோவில் உள்ளிட்ட 9 மாவட்ட தீயணைப்பு துறை வீரா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா்கள் சத்தியகீா்த்தி, ராஜூ, கல்யாணகுமாா், தென்னரசு, சுகுமாா், விவேகானந்தன், கணேசன், வினோத், கவிதா ஆகியோா் பங்கேற்றனா்.
முதல் நாள் நடந்த வீரா்களின் அணிவகுப்புப் போட்டியில், திருநெல்வேலி மாவட்ட அணி முதலிடமும், தேனி மாவட்ட அணி இரண்டாமிடமும், விருதுநகா் மாவட்ட அணி மூன்றாமிடமும் பெற்றன. மேலும், வீரா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.