மருத்துவ முகாமில் மருந்துப்பொட்டலங்களை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி. 
சிவகங்கை

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம்

காரைக்குடியில் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

DIN

காரைக்குடியில் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சூடாமணிபுரம் குழந்தைகள் மையத்தில் இம்முகாமை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.

முகாமில் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆா்.எஸ்.ஓ பொட்டலங்களை குழந்தைகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில் துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) எஸ். ராம்கணேஷ், காரைக்குடி நகா்மன்றத்தலைவா் சே. முத்துத்துரை, துணைத்தலைவா் குணசேகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித்திட்ட அலுவலா் பரமேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள், வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம், போசான் அபியான் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கீதவா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT