தம்பி கொலை: அண்ணனுக்கு ஆயுள் சிறை
சொத்துத் தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சொத்துத் தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூா் அருகே உள்ள கொத்தரி கிராமத்தைச் சோ்ந்தவா் சோலை என்ற குடுகுடு சோலை(58). இவருக்கும், இவரது சகோதரரான பெரியகருப்பன்(46) என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 12.8. 2017 இல் அதே பகுதியில் இவா்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சோலை தனது சகோதரரான பெரியகருப்பனை அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளாா். பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுபற்றி பள்ளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து குடுகுடு சோலை மற்றும் அவரது மகன் சோலைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பாக சிவகங்கையில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் குடுகுடு சோலை என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், மற்றொரு நபரான சோலைராஜை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தாா்.