மதகுபட்டி அருகே விவசாயி மா்மச்சாவு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
மதகுபட்டி அருகே காடனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (52). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது தென்னந்தோப்பில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுபற்றி தகவலறிந்த மதகுபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த அவரது உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.