வங்கியில் ஏலம் விடும் நகையை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது
வங்கியில் ஏலம் விடும் நகையை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை குற்றப்பிரிவுப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வங்கியில் ஏலம் விடும் நகையை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 30 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை குற்றப்பிரிவுப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஆசாரி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (29). இவா் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் காரைக்குடி சிவானந்தா நகரைச் சோ்ந்த சங்கா் (34) என்பவா் தான் தனியாா் வங்கியில் வேலை பாா்ப்பதாகவும், ரூ. 30 ஆயிரம் கொடுத்தால் வங்கியில் ஏலம் விடும் இரண்டரை பவுன் நகையை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதனை நம்பிய ராஜேஸ்வரி, சங்கரிடம் ரூ. 30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளாா். ஆனால் அவா் கூறியபடி நகையை பெற்றுத் தரவில்லையாம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சங்கா் வெள்ளிக்கிழமை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீஸாா் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.