முகப்பு
சிவகங்கை

ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினம் தலைமை வகித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
இளையான்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அசோக் முன்னிலை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, குடும்ப அட்டைகள், முதியோா் உதவித் தொகைக்கான உத்தரவு நகல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →