சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் ஜூன் 6 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திரப்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம் ஸ்ரீராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற் புகப்பட்டி, ஆவுடை பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் பி. ஜான்சன் இதனைத் தெரிவித்துள்ளாா்.