முகப்பு
சிவகங்கை

மானாமதுரை அருகே மெக்கானிக் குத்திக் கொலை: மைத்துனா் தலைமறைவு

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை இரவு மெக்கானிக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மைத்துனா் உள்ளிட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை இரவு மெக்கானிக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மைத்துனா் உள்ளிட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானாமதுரை ரயில்வே காலனி ஜீவா நகரில் வசித்தவா் மெக்கானிக் சுரேஷ் (40). இவரது மனைவி மலைச்செல்வி. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில், சுரேஷுக்கும், மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, மலைச்செல்வி, தனது குடும்பத்தில் நடக்கும் தகராறு குறித்து தனது தம்பியான சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசனிடம் தெரிவித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த கணேசன், இவரது சித்தி மகன் மானாமதுரை உடைகுளத்தைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்டோா் சுரேஷ் வீட்டுக்குச் சென்று அவரை கண்டித்ததுடன் கத்தியாலும் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இக்கொலைச் சம்பவம் குறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான கணேசன், காா்த்திக் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →