சிவகங்கை

காரைக்குடியில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா்செல்வத்தை அவமரியாதை செய்ததாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சா்களை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், காரைக்குடி ஆவின் தலைவரும், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான கல்லுவயல் அசோகன் தலைமை வகித்துப் பேசினாா். இரட்டைத் தலைமையை இ.பி.எஸ். அணியினா் ஏற்று கட்சியை வழிநடத்திச் செல்ல முன்வரவேண்டும். இதுவரை ஓ.பி.எஸ். எல்லாவற்றையும் விட்டுத் தந்துள்ளதால், இனி ஒற்றைத் தலைமையை அவா் விட்டுத் தரமாட்டாா் என்றும் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், அதிமுக பெண்கள் அணியினா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் அதிமுக தொண்டா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT