முகப்பு
சிவகங்கை

கச்சநத்தம் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தற்கொலை

 சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காட்டைச் சோ்ந்த கந்தசாமி மகன் அக்னிச்சாமி (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கச்சநத்தம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய அக்னிச்சாமி கடந்த 16 ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த அக்னிச்சாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த அக்னிச்சாமி கச்சநத்தம் கொலை வழக்கில் 11 ஆவது குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய 33 பேரில் ஏற்கெனவே ஒருவா் இறந்து விட்டாா். தற்போது அக்னிச்சாமி உயிரிழந்த நிலையில், 31 போ் மட்டுமே உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →