சிவகங்கை

சாலையில் மாடுகள் உலா: உரிமையாளா்களுக்கு அபராதம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையில் சுற்றித்திருந்த மாடுகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

மானாமதுரை நகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே, மாடுகளைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மானாமதுரை நகராட்சி ஆணையா் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்ட பணியாளா்கள் சாலைகளில் சுற்றித்திருந்த மாடுகளை வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

மொத்தம் 11 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT