சிவகங்கை

கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கல்லூரி மாணவா்களுக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா், தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் தென்னரசு முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், சுமாா் 60 போ் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தனா். தகுதியானவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி முன்னிலையில் கடன் ஆணை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் 5 வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதேபோல், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாட்சியா் லெட்சுமணராஜூ தலைமையில் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இங்கு விண்ணப்பித்துள்ள 50-க்கும் மேற்பட்டோரின்

தகுதிகள் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT