முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரையைச் சோ்ந்தவா் நாகலிங்கம் மகன் வேல்முருகன்(42). இவா், இங்குள்ள புறவழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பூமிநாதன் மகன் முகேஷ்கண்ணன் (19), வேல்முருகனை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றாராம். இதுகுறித்து

மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து முகேஷ்கண்ணனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →