பங்குச் சந்தை உயர்வு எதிரொலி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
இந்திய பங்குச் சந்தை மீண்டு எழுந்ததையடுத்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
புதுதில்லி: கடந்த 3 நாட்களாக, இந்திய பங்குச் சந்தை மீண்டு எழுந்ததையடுத்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று வர்த்தக நாட்களில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 2,140.21 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 633.29 புள்ளிகள் உயர்ந்து 76,704.13 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
பங்குகளின் மீட்சியைத் தொடர்ந்து, பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் மூன்று நாட்களில் ரூ. 9,18,579.57 கோடி அதிகரித்து ரூ. 4,39,00,831.84 கோடியாக உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்களிடம் பங்கு வாங்கும் ஆர்வம் சீராக அதிகரித்ததன் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தை பதிவு செய்தன.
Equity investors wealth surged by Rs 9.18 lakh crore in three days of market rebound amid buying and recovery in global benchmark indices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.