முகப்பு
சிவகங்கை

தேவகோட்டையில் 2500 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில்அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுமாா் 2500 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில்அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுமாா் 2500 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவகோட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேவகோட்டை நகராட்சி ஆணையா் சாந்தி தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தியாகிகள் சாலையில் உள்ள கிடங்கில் சுமாா் 2500 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அலுவலா்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனா். மேலும், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →